fbpx

ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்…! படுகாயமடைந்த நபர்களுக்கு 2 லட்சம் நிவாரணம்…! மத்திய அரசு அறிவிப்பு…!

ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.

ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில்‌ இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர்‌ – ஹவுரா விரைவு ரயில்‌பாஹனாக நகர்‌ அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம்‌ புரண்டு அருகில்‌ இருந்த மற்றொரு தண்டவாளத்தில்‌ விழுந்தது. சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையம்‌ நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌ ஏற்கனவே தடம்‌ புரண்டு கிடந்தய ஷ்வந்த்பூர்‌ – ஹவுரா ரயிலின்‌ பெட்டிகள்‌ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

அடிதூள்...! 10,11,12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வு எழுதும்‌ மாணவர்களுக்கு சிற்றுண்டி...! அரசு அதிரடி உத்தரவு...!

Sat Jun 3 , 2023
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்‌; அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ மாதம் தோறும்‌, முதல்‌ வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும்‌. அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம்‌ வரும்‌ 9-ம் தேதி பிற்பகல்‌ 3 மணி முதல்‌ 4.30 மணிவரை கட்டாயம்‌ நடத்தப்பட வேண்டும்‌. 2023-24-ம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி இடைநிற்றல்‌ இல்லாமல்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ படிப்பை தொடர்வதையும்‌, அனைத்து வகை அரசுப்‌ […]

You May Like