திரைப்பட நடிகை உத்ரா பாக்கர் புனே மருத்துவமனையில் காலமானார்
பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகை உத்ரா பாக்கர் புனே மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
மிருணாள் சென்னின் ‘ஏக் தின் அச்சனக்’ திரைப்படத்தில், வீடு திரும்பாத ஒரு பேராசிரியரின் மனைவியாக, நடித்துள்ளார். அது அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. கோவிந்த் நிஹலானியின் ‘தமாஸ்’ மற்றும் ‘ருக்மாவதி கி ஹவேலி’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
மராத்தி மற்றும் இந்தி படங்களில் தனது பன்முகத் திறமைக்காக அறியப்பட்டவர் உத்ரா பாக்கர். உம்ராவ் ஜான் போன்ற நாடகங்களில் அவரது ஆற்றல்மிக்க நடிப்பு பேசப்பட்டது. அவர் AIR நாடகக் கலைஞராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.