fbpx

8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்!… இன்றுமாலை தகனம்!

ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின், உடலுக்கு இன்றுமாலை தகனம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்.04-ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது பூத உடல் இன்றுமாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி. நகர்) மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

டெல்லியில் இன்று திட்டமிட்டப்படி விவசாயிகள் போராட்டம்!... மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

Tue Feb 13 , 2024
சண்டிகரில் நடைபெற்ற மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இன்று திட்டமிட்டப்படி டெல்லியில் போராட்டம் நடைபெறும் என விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அரசு […]

You May Like