இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நாட்டைப் பாதுகாத்ததற்காக பாதுகாப்புப் படையினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்
“இந்தக் காலங்களில் நம்மைப் பாதுகாத்ததற்காக நமது இந்திய ஆயுதப் படைகளுக்கு அவர்கள் ஹீரோக்களைப் போல என்றென்றும் நன்றி கூறுகிறேன். அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் செய்த தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்” என்று கைகளைக் கூப்பி இதய ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இந்திய ராணுவத்தைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ராணுவத்தின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி செய்தியைப் பகிர்ந்துள்ளார்.