உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது உடல் எடையை அதிகரிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, காலப்போக்கில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உடல் பருமனாகக் காணப்படுகிறார்கள்.
உடல் பருமனை குறைப்பது முக சிரமம் என பலர் நினைக்கின்றனர். 30 30 30 விதியை பயன்படுத்தி எடையை குறைப்பது மிக சுலபம். 30 30 30 விதி மிகவும் பாதுகாப்பானது. இந்த விதியில் காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் புரதம் சாப்பிட்டவுடன் அடுத்த 30 நிமிடங்களுக்கு மிக எளிதான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதில் உணவு கட்டுப்பாடு, கலோரி எண்ணிக்கையை கணக்கிட தேவையில்லை.
30 30 30 விதியில் உடற்தகுதியை மேம்படுத்தும் வகையிலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் வகையிலும் கார்டியோ, உடல் வலிமை அதிகரிக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். 30 நிமிடங்களில் வெவ்வேறு உடற்பயிற்சிகளை செய்யும் போது காயங்களை தவிர்க்கலாம். எடை நிர்வாகம், வளர்சிதை மாற்றம் ஊக்குவிப்பு, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்திட இந்த 30 30 30 விதி உதவும்.
இந்த விதியை பின்பற்ற ஆரம்பித்தவுடன் உடலில் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகள் ஒல்லியாக மாறும். உடல் தோற்றத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். டிம் பெர்ரிஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் இந்த விதி பகிரப்பட்டு இருந்தது.
30 30 30 விதியின் பயன்கள்:
* உங்களுடைய பழக்கவழக்கங்களில் மாற்றம் ஆரம்பிக்கும்.
* உடல் எடை குறைந்தாலும் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படும், பசி குறையும், உடலில் இரத்த சர்க்கரை அளவுகள் சீராகும்.
* உடலில் ஆற்றல் அளவுகள் அதிகரித்து எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்த முடியும்.
* கார்டியோ பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்
* சிறிதளவில் தொடங்கும் மாற்றம் நீண்ட நாட்களுக்கு பயனளிக்கும்.
* 30 30 30 விதி எல்லோருக்கும் பயனளிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.