சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் பிரபலங்களான அமீர் – பாவனி ஜோடிக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் தான், சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு, மாலையும் கழுத்துமாக நிற்கும் சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, மலையாள சேனலான ஜீ கேரளம் மற்றும் அஜெண்டா சேனலில் அபூர்வ ராகம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் செகனாஸ் ஹூசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர், சூரியா சேனலில் ஆதிரா மற்றும் சுந்தரி நாடகத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தான், மற்றொரு சீரியல் நடிகையான அஸ்வினி அக்னிஹோத்திரியும், செகனாஸ் ஹூசனும் தாலிக்கட்டிக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இருவரும் சிரித்துக் கொண்டு மாறி மாறி தாலிக் கட்டி கொள்கின்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்து கொண்டனர். மேடையில் இருவரும் மாப்பிள்ளை – மணப்பெண்ணும் நிற்பது போலவும், மாலை சரி செய்து கொள்வது போலவும் வீடியோ வெளியானது. மேலும், உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
விஜய் டிவியில் வேதா என்ற சீரியலிலும், சன் டிவியில் மலர் என்ற சீரியலிலும் அஸ்வினி நடித்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர், இது சீரியலுக்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் இருவரும் லெஸ்பியனாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.