fbpx

’புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை’..? ’முதல்வர் தவறான தகவலை பரப்புகிறார்’..!! மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேட்டி

மதுரையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தொலைநோக்கு பார்வையுடன் 2047-க்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் சம்மதித்தது. ஆனால், தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி தவறான தகவல்களை பேசி வருகிறார். மத்திய கல்வித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்லியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது..? ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

Read More : 3-வது பொண்டாட்டிக்கு ஆசையாக ஸ்டேட்டஸ் வைத்த கணவன்..!! நியாயம் கேட்க ஓடிவந்த 2-வது மனைவி..!! அப்படினா முதல் மனைவியின் நிலைமை..?

English Summary

What is the problem with adopting the new education policy?

Chella

Next Post

’தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாதா’..? ’இனி உங்களுக்கு வரி தர முடியாது’..!! ’சட்டமன்றத்தில் தீர்மானம்’..!! சீமான் சொன்ன யோசனை..!!

Mon Feb 17 , 2025
Seeman has urged the Tamil Nadu government to pass a resolution stating that "Tamil Nadu school children will not be able to pay taxes if they are not given the appropriate funds."

You May Like