fbpx

செக்..! இந்தியாவில் 65 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்…! நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் மாதாந்திர அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 65 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மே 1ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் புகார்களில் தெரிவித்தபடி கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மே 16 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில், புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் 6,508,000 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது. தீங்கு விளைவிக்கும் அல்லது தேவையற்ற செய்திகளை அனுப்ப முயன்ற 2,420,700 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆபாசச் செய்திகள் போன்ற தகவல்களை பரிமாற்றம் செய்தால் உங்களுடைய வாட்ஸப் கணக்குகளும் முடக்கப்படலாம் என நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Vignesh

Next Post

ரயில் பயணிகள் கவனத்திற்கு!... வெறும் ரூ.100 முதல்!... ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!...

Mon Jul 3 , 2023
ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில், ஒரு இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை குறைந்த விலையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான பயணிகள் இந்த வசதி தெரியாததால் ரயில் […]

You May Like