fbpx

முந்திரி காட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்; விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண் பலாத்காரம்..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் 23 வயதான பிரியா( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2015-ம் ஆண்டு, தனது ஆண் நண்பருடன் காரைக்குடியை அடுத்துள்ள ஆவுடையப்பொய்கை அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கீழையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மற்றும் கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும், தாங்கள் காவலர்கள் என்றும் விசாரணைக்கு நீ எங்களோடு வர வேண்டும் என்றும் பிரியாவிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரியாவும் அவர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து, இருவரும் பிரியாவை அருகில் இருந்த முந்திரி காட்டிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரியா நடந்த சம்பவம் குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சாத்தையா, அர்ஜுனன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இன்று இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், தலா ரூ. 46 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

Read more: “ஒரு அப்பாவி கூட்டம் உங்களுக்கு ரசிகர்களாக உள்ளது”; தனுஷ் பற்றிய உண்மையை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..

English Summary

woman-was-sexually-abused-in-forest

Next Post

பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா; 8-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்..

Sat Nov 16 , 2024
school-girl-was-sexually-abused-by-grandfather

You May Like