ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச மகளிர் அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி, வங்கதேச பந்துவீச்சை விளாசி தள்ளினர். அதிரடிய ஆடிய இந்திய அணி வெறும் 8 புள்ளி 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா 17 ரன்களும், ஜேமியா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.