fbpx

“என்னை இப்படி ஏமாத்திட்டியேடா”..!! நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது காதலியை கூட்டு பலாத்காரம் செய்த காதலன்..!! ஈரோட்டில் திடுக்கிடும் சம்பவம்..!!

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களோடு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் கிருஷ்ணா (வயது 21). இவர், கூலி வேலை செய்து வரும் நிலையில், ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி மீது கிருஷ்ணாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவருமே நெருங்கி பழகி வந்துள்ளனர். சிறுமியிடம் நான் உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி, அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த மே 2ஆம் தேதி வழக்கம் போல் ஈரோடு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பயன்பாடற்ற கட்டிடத்திற்கு அந்த சிறுமியை கிருஷ்ணா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு கிருஷ்ணாவின் நண்பர்கள் சந்தோஷ் (25), மணிகண்டன் (25), குகன் (23) ஆகிய 3 பேரும் வந்துள்ளனர். இவர்களை பார்த்ததும் சிறுமி பயந்துள்ளார்.

பின்னர், காதலன் கிருஷ்ணன் உள்பட 4 பேரும் சேர்ந்து 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், சிறுமி வலியால் துடித்துள்ளார். பின்னர், அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனே காவல்நிலையத்தில் அந்த 4 பேர் மீது புகாரளித்துள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமி அளித்த விவரங்களின் அடிப்படையில், அவர்களை தேடி பிடித்து போக்சோ வழக்கில் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : “இங்க நிலைமை சரியில்லப்பா”..!! ஐபிஎல் நிறுத்தப்பட்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி வீரர்..!! யார் தெரியுமா..?

English Summary

The incident of a 17-year-old girl being taken to a secluded area and gang-raped by her friends on the pretext of falling in love has caused great shock in Erode.

Chella

Next Post

“என் பொண்டாட்டி கூட நீ எப்படி உல்லாசமா இருக்கலாம்”..? உறவினரின் ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொன்ற ரவுடி..!!

Sat May 10 , 2025
A rowdy man who brutally murdered a 26-year-old man who was having an affair with his wife, took her to drink alcohol, stabbed her multiple times, and cut off her penis has been jailed.

You May Like