fbpx

“குடிச்சிட்டு வந்து அம்மாவையா அடிக்கிற.”? தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்.!

குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு(58) இவரது மனைவி வசந்தாமணி. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்களுக்கு திருமணமான நிலையில் இவர்களது மகனான சதீஷ்குமார்(28) தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

காதல் திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் தனது மனைவியுடன் சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது தந்தை பாபு மது குடித்துவிட்டு வந்து தாய் வசந்த மணியை கொடுமை செய்வதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்று தந்தையை தட்டி கேட்டிருக்கிறார் சதீஷ்குமார். இதில் ஆத்திரமடைந்த பாபு மகனை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சதீஷ்குமார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகன் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

கௌரவக் கொலை: "கண்டவன் கூட காதல் கேக்குதோ."! சொந்த அக்காவை கொடூரமாக வெட்டி சாய்த்த 17 வயது சிறுவன்.!

Wed Dec 6 , 2023
நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சொந்த அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகள் தங்கத்தாய்(21) அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரை காதலித்து […]

You May Like