
கன்னியாகுமரி: சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த காசியின் வீட்டில் சோதனை நடத்தியதில், மெமரி கார்டுகள், 3 செல்போன்களைபோலீசார் கைப்பற்றி உள்ளனர். சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களில் முக்கிய விஜபிகளும் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான காசிக்கு, நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள், நிர்வாண போட்டோக்கள் எடுத்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பது தான் தொழிலாக இருந்துள்ளது. இதன் மூலம் பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.
இவர் மீது, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ள காசியின் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில் வழக்கு மாற்றப்பட்டது. மேலும் காசியின் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறையில் உள்ள காசியினை இதுவரை 3 முறை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் முதல் 2 விசாரணைகளிலும் போதுமான தகவல்களை பெறவில்லை என்று கூறப்பட்ட நிலையில், 3வது முறையாக சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சிபிசிஐடி போலீசார், காசியுடன் சேர்த்து அவரது நண்பர் 19 வயது ஜினோவையும் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்களை கைப்பற்றி உள்ளனர். இதை தவிர, சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது. இதனையடுத்து 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், காசியும் அவரது நண்பரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்..

விசாரணையில் சிக்கிய ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக காசிக்கு விஐபிகளுடன் தொடர்பு இருந்திருக்கும் என்ற வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காசியின் மெமரி கார்டு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்வதற்கு, காசிக்கு உதவியதாக ஜினோவுடன் சேர்த்து இன்னொரு நண்பர் பெயரும் தற்போது வெளியாகிவருகிறது. அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்பதால் கைது நடவடிக்கை தீவிரமாகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது மேலும் 6 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.