சென்னையில் 10வது படித்தவர்களுக்கு 25000 ரூபாய் சம்பளத்தில் வேலை!

சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் இன்டெலிஜென்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டுகளுக்கான 100 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது. மேலும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் . இதற்கு முன் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விவேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக 15000 முதல் 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 31.05.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான பிறகு விபரங்களை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அதற்கான முகவரி ipfchennai.com

Baskar

Next Post

3000 பேருக்கு வேலை!... ரூ. 7,614 கோடியில் ஓலா - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Sun Feb 19 , 2023
தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் […]

You May Like