தமிழகம் முழுவதும் 12-ம் தேதி வரை வானிலை இப்படி தான் இருக்கும்…!

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் .தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பதிவு எதுவும் இல்லை. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

செக்...! இனி காவலர்கள் பணியில் இருக்கும் போது இதை எல்லாம் செய்ய கூடாது...! அரசு அதிரடி தடை செய்து உத்தரவு...!

Thu Feb 9 , 2023
காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, தடை செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறைக்கு அரசு சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, இணையதளங்களில் படங்களைப் பகிர்வது மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மாநில காவல்துறை இயக்குநர் டிஎஸ் சவுகான் பரிந்துரைத்த சமூக ஊடகக் கொள்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, காவலர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் மொபைல் […]

You May Like