சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமணம் நடைபெற்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயிலை நிர்வாகம் செய்து வரும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தீட்சிதர்களை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை திருமணம் செய்த சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உறுதி என கூறியிருந்தார். இந்த நிலையில் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.