தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,479 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,924-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1342 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22,047-ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.