’ஷேன் வார்னே மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம்’..!! பகீர் கிளப்பிய பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர்கள்..!!

ஷேன் வார்னே மரணம் கோவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையது என பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் பகீர் தகவலை அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஷேன் வார்னே மரணம் கொரோனா தடுப்பூசியான எம்.ஆர்.என்.ஏவுடன் தொடர்புடையது என இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இதய நோய் நிபுணரும் ஆஸ்திரேலிய மருத்துவருமான அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கிறிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் ஷேன் வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு இதய நோய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த இரு மருத்துவர்களும் கூறுகையில், “ஒரு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியானது அவர்களின் உடல்நிலையில் விரைவாக பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். ஷேன் வார்னே 52 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைவது என்பது அசாதாரணமானது. அதே நேரம் ஷேன் வார்னேவின் உடல் எடையானது அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. மேலும், அதிக புகைப் பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் ஆரோக்கியமான வாழ்வியலை கடைப்பிடிக்கவில்லை என தெரிகிறது.

அவரது இதய தமனிகளில் லேசான பாதிப்புகள் இருந்தன. எனினும் கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதும் அவரது உடல்நிலை வேகமாக முன்னேற்றம் கண்டது. ஆஸ்திரேலியா உள்பட உலகமெங்கும் காணப்படும் அதிக மரணங்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்த மருந்தின் பயன்பாடு உலகமெங்கும் நிறுத்தப்பட வேண்டும். இந்த தடுப்பூசியை அவர் 9 மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்டார். எங்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள், எங்கள் தந்தை ஃபைசரின் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை 2 டோஸ் செலுத்திய சில மாதங்களில் இறந்துவிட்டனர். இதை நாங்கள் பார்த்துள்ளோம். கொரோனா தடுப்பூசிகள் இதயத்தை மோசமான முறையில் பாதிக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஷேன் வார்னேவின் நண்பரும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான திமிட்ரி மாஸ்கரேன்ஹாஸ் கூறுகையில், “நான் எனது நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அவருடைய மரணத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் என்பதை எண்ணும் போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், இன்று உயிருடன் இருந்திருப்பார். எப்போதுமே அடுத்தவர்கள் காயமடையவோ, பாதிப்படையவோ ஷேன் வார்னே விட மாட்டார். எனவே, மருத்துவர்களின் இந்த ஆய்வை ஏற்று இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் நிறுத்த நான் ஆதரவு அளிப்பேன்” என்றார்.

Chella

Next Post

முதல்வர் தொடர்பாக அவதூறு…,…! பாரதிய ஜனதா கட்சியின் பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்….!

Thu Jun 22 , 2023
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் உமா கார்கி பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல திமுக, பெரியார், மணியம்மை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக உமா கார்க்கி தொடர்ந்து, அவதூறு கருத்துக்களை […]

You May Like