டெல்லியின் படேல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 28) சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி என்றும் இவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய தங்கையை சிலர் ஈவ்-டீசிங் செய்ததால் நபர்களை எச்சரித்து கன்னத்தில் அறைந்துள்ளார்.
இச்செயலால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பழிவாங்கும் நோக்கத்தில் மனோஜை கொலை செய்திருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அதில் சம்மந்தபட்ட கொலையாளிகளை தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று தினத்தில் டெல்லி காவல்துறையினர் (அக் 30) இரண்டு இளைஞர்களை கைது செய்து, அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.