தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழகஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை ஆனாலும் தமிழக அரசும், காவல்துறையும் இதற்கான முயற்சியையும் கைவிடுவதாக இல்லை.
சென்ற 2 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற நான்கு ஏடிஎம்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு தீவிரமான சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருக்கிற மாவட்ட எல்லைகளில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழ்நிலை எல்லாம் இந்த கொள்ளை சம்பவத்தில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய நபர்களே ஈடுபட்டு இருப்பதாகவும், தகவல் கிடைத்தது. கியாஸ் கட்டர் உள்ளிட்டவற்றை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தங்களுடைய அடையாளம் மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதை மனதில் வைத்து, கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைத்திருக்கிறார்கள். இதில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் சேதம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு 51 வங்கி பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையின் போது வாங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
மேலும் அப்படி சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால் முகத்தை அடையாளம் காண உதவிகரமாக இருக்கும் மென்பொருள் இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களை ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும் சமயத்தில் எச்சரிக்கை மணி அடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் ஏடிஎம் மையத்திற்கு அருகில் இருக்கின்ற காவல் நிலையத்திலும் இதற்கான எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் அமைப்பு இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு வலியுறுத்தி இருக்கிறார்