திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் காதல் நெருக்கமாகி உல்லாசம் வரை சென்றது.
இதில் தற்போது நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்றார். சின்னசாமியின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயித்தனர். இன்று காலை அவர்க்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் இதை அறிந்த நாகப்பிரியா அதிர்ச்சி அடைந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மண்டபத்திற்கு வந்து இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால், மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.