உடல், சருமம், கேசம் உள்ளிட்டவைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கும் அற்புத பானம்
தேங்காய்ப்பால் ஆகும்.. இதில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேங்காயை பொருத்தவரை அதன் மரத்தின் வேர் முதல் தேங்காய் தொட்டிவரை அனைத்து வகையிலும்
மக்களுக்கு பயன்படுகிறது. இந்த தேங்காயில் எண்ணிலடங்காத நன்மைகள் அடங்கியுள்ளன. அதன்படி,
தேங்காய்ப் பாலிலும், வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம்,
செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலின் உள் ஆரோக்கியம்
மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும் அற்புத
பானமாக தேங்காய்ப் பால் திகழ்கிறது.
தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்குகிறது. மெக்னீஸியம் நிறைந்துள்ள
தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டான
செலீனியம் உள்ளதால், ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கவும், பேக்டீரியா, வைரஸ் மற்றும்
பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்டதாகவும் வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும்
பாக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கவும் தேங்காய்ப்பால் பெரிதும் உதவிகரமாக உள்ளது.
வறண்ட, உடைந்த, நுனி பிளந்த கேசத்திற்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற,
தேங்காய்ப்பாலை கேசத்தின் வேர் முதல் நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மஸாஜ்
கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். எனவே நாம்
பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து முடிகளில் தேய்த்துவந்தால், கூந்தல் மினுங்கும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளித்தால்,
அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும். வயதாவதால் ஏற்படும் சரும
சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள
தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும். சரும
எரிச்சல், சோரியாசிஸ், பேக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட
இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.