கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகனின் ல் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் கடந்த வாரம் முதல், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் வசதி கொண்டு சுவாசித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று காலை முதல் அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து வருகிறது. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதயம் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது” தெரிவித்துள்ளது.