வாழ்வையே அழிக்கின்ற பெண் சாபம் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? எப்படி தவிர்ப்பது.?

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பெண் சாபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

13 வகை சாபங்கள் இருந்தாலும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம் என்று கூறப்படுகிறது. வீட்டின் மகாலட்சுமியாக இருக்கும் பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்கிறார்.

அவருக்கு பிறந்த வீட்டில் அதிகப்படியான அன்பு கிடைத்திருக்கும். ஆனால், புகுந்த வீட்டில் உதாசீனம் கிடைக்கும். அப்படி யாராவது உதாசீனம் செய்தால் அந்த பெண் எதையாவது கூறினால் அது சாபமாக மாறும்.

எனவே பெண்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய ஆண்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அது விரைவில் தீர்ந்துவிடும். மனைவியை கொடுமை படுத்துகின்ற கணவனுக்கு பெண் சாபம் தானாகவே கிடைக்கும். அவள் வாய்விட்டு தான் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை.

அதுபோல பெண்ணை கைவிட்டு வேறொரு பெண்ணை மணப்பது, துரோகம் செய்வது உள்ளிட்டவற்றால் மனம் நொந்து அந்த பெண் சாபம் அளித்தால் அது குடும்பத்தையே வேரோடு அழிக்கக்கூடிய சக்தி கொண்டது.

வயதான காலத்தில் தவிக்கின்ற தாயை கவனித்துக் கொள்ளாமல் இருந்தால் நிச்சயம் அவங்களுக்கு பெண் சாபம் கிடைக்கும். இது பரம்பரையையே அழிக்கக்கூடிய சக்தி படைத்ததாக கூறப்படுகிறது.

Baskar

Next Post

டாக்சி ஓட்டுனரால் விமானத்தை தவற விட்ட நபர்.! உபர் நிறுவனத்திற்கு அபராதம்.!

Sun Oct 30 , 2022
வெளியே செல்ல ஆட்டோ, டாக்சி தேடுவதை விட தற்போது எங்கிருந்து வேண்டுமானாலும் செயலிகள் மூலம் புக் செய்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அதன் படி வழக்கறிஞர் கவிதா ஷர்மா என்பவர் மும்பை டோம்பிவிலியில் வசித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் வழியாக செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார். Uber ஆப் மூலம் வழக்கறிஞர் கவிதா […]

You May Like