உங்களுக்கு பிளாக் டீ பிடிக்காதா?…. ஆரோக்கிய நன்மைகள் அனைத்தும் அதில்தான் இருக்கு!… ஆய்வாளர்கள் கூறும் உண்மை!

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ள பிளாக் டீ பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். ஏனெனில் பிளாக் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. எனவே க்ரீன் டீயைப் போலவே பிளாக் டீயும் நமக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பிளாக் டீ பாலுடன் சேர்த்து பருகாமல் இதை வெறும் தண்ணீருடன் எடுத்துக் கொள்வது கூடுதல் நன்மை அளிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செல்களை டி.என்.ஏ சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். கறுப்பு தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும் என்றும் குறிப்பாக பெண்களுக்கு பிளாக் டீ மிகச் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், செரிமான செயல்முறைக்கு உதவும் ஒரு ப்ரீபயாடிக் காலை உணவாக பிளாக் டீ செயல்படுகிறது என்றும் இதிலுள்ள ப்ளவனாய்டுகள் கூடுதல் எடையை குறைக்க உதவுகிறது. பிளாக் டீயின் மூலக்கூறுகள் குடலில் வெகுநேரம் தங்கி குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் கல்லீரல் கொழுப்பு தேங்குதல் எரிக்கப்படுகிறது. ஒரு கப் பிளாக் டீயில் சுமார் 47 மில்லிகிராம் காஃபின் உள்ளது. இந்த காஃபின் ஆற்றலை அதிகரிப்பதற்கும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

பிளாக் டீ இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோயை நிர்வகிக்க உதவுகிறது. பிளாக் டீயில் ப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது கிளைசெமிக் குறியீட்டை குறைக்கிறது. வயதானவர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நீண்ட காலத்திற்கு பிளாக் டீ அருந்தியவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு 70% குறைவாக இருப்பதாகக் காட்டியது.

புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் ப்ரீரேடிக்கலை தடுத்து, இதனால் புற்றுநோய் செல்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற குறிப்பிடத்தக்க வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் பிளாக் டீ மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாக் டீ குடிப்பது மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களில் குளோபுலின் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் படி, ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் பிளாக் டீ உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 21% வரை குறைவு என்றும் பிளாக் டீயில் இதய நோயாளிகளில் கரோனரி தமனி செயலிழப்பை மீட்டெடுக்கும் நிறைய சத்துக்கள் உள்ளதால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளையும் சரி செய்கின்றன. பிளாக் டீ குடிப்பது உங்களுக்கு மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோலின் உற்பத்தியை குறைக்கிறது. பிளாக் டீயில் ஐ-தியானைன் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ரிலாக்ஸ்யை தருகிறது.

ஈறுகளில் இரத்தப்போக்கு, வாய் துர்நாற்றம் , பிளக் உருவாக்கம் மற்றும் பல வாய்வழி பிரச்சினைகளை தீர்க்கிறது. ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் கேடசின்கள் போன்ற பாலிபினால்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கண்டுள்ளன. இவை உங்க வாய்வழி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பிளாக் டீ உமிழ்நீர் உற்பத்தி நொதிகளை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது.

Kokila

Next Post

தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு மின்வாரியத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியத்துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி இயக்குனர் பணிக்காக ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

You May Like