கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவர் அம்மு (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சீனிவாசனுக்கு தெரியவந்ததால், மனைவி அம்முவை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளலாம் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் சீனிவாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.