”என் பொண்டாட்டி கூட உனக்கு என்னடா வேலை”..!! மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன்..!!

சென்னை புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு சுதாசந்தர் ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் புழல் வினாயகபுரம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல், ஆட்டோவை வழிமறித்து சுதாசந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கத்தியால் சுதாசந்தரின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுதாசந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த விசாரணையில், சுதாசந்தருடன் ஆட்டோவில் சென்ற இளம்பெண், ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த ராகிணி என்பது தெரியவந்தது. ராகிணியை கடந்த 3 வருடங்களாக சுதாசந்தர் காதலித்து வந்துள்ளார். இது ராகிணியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், கடந்த ஓராண்டுக்கு முன் ராகிணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஆனால், திருமணத்திற்கு பின்னும் சுதாசந்தருடன், ராகிணி தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள், ஆவடியில் ரகசியமாக தனிகுடித்தனம் நடத்தி வந்துள்ளனர். பின்னர், கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் செங்குன்றம் லட்சுமிபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார் என்று தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தனது மனைவியுடன் தனி குடித்தனம் நடத்திய கள்ளக்காதலன் சுதாசந்தரை, ராகிணியின் கணவன் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் கார்த்திக் (30), ராகிணியின் அண்ணன்கள் பரத் (எ) ராபின் (30), உதயா (26) ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராகிணியின் கணவர் அம்பத்தூரை சேர்ந்த வசந்த் (28), அவரது தந்தை வாசுதேவன் (59) ஆகிய இருவரையும் சூரப்பட்டு பகுதியில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! மிகப்பெரிய சேஸிங்..!! பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி..!!

Mon Feb 13 , 2023
மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான முனிபா அலியும் ஜவேரியா கானும் விரைவிலேயே பெவிலியன் திரும்பியபோதும் கேப்டன் மரூப் மட்டும் […]

You May Like