பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவர் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 34. எனினும் அவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எம்.எஸ். தோனி அண்டோல்ட் ஸ்டோரி, பி.கே, கேதர்நாத் உள்ளிட்ட பல படங்களில் சுஷாந்த் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சிச்சோர் என்ற படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்ததார். கடந்த வாரம் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.