சென்னை அணியில் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்கள்..!! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கிரிக்கெட்..!!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9-வது சீசனில் கலந்துகொள்வதற்காக தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிசிஎல் (CCL) என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் 9-வது சீசன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். வருகிற 18ஆம் தேதி பெங்களூருவில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் இடையே முதல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ் அணி சார்பில் கேப்டன் ஆர்யா தலைமையில், பரத், ஜீவா, விஜய் யேசுதாஸ், பிரித்விராஜ், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபல நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த 2017-க்கு பிறகு சென்னை ரைனோஸ் அணியிலிருந்து விலகிய விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்த சீசனில் மீண்டும் இணைந்துள்ளனர். கிரிக்கெட் லீக்கில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் சென்றபோது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை ரைனோஸ் அணி முதல் இரண்டு முறை சிசிஎல் கோப்பைகளை வென்றதுடன், 2015ஆம் ஆண்டில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

சென்னை ரைனோஸ் அணி, பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 7 மணிக்கு இரண்டாவதாக நடக்கும் போட்டியில், கர்நாடகாவுடன் பெங்களூருவில் மோதவுள்ளது. அதன்பிறகு ஜெய்பூரில் பிப்ரவரி 25ஆம் தேதியும், மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்திலும், மார்ச் 11ஆம் தேதி சென்னையிலும் மோதவுள்ளது. மொத்தம் 16 போட்டிகள் நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இரு அரையிறுதிப் போட்டிகள் வரும் 18ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முறையே 1 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்த அணிகள் முதல் அரையிறுதியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

Chella

Next Post

குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் இதுதான் நடக்கும்போல..!! ரூ.80 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்..!!

Sun Feb 5 , 2023
தனது தந்தையின் செல்போனை வாங்கி, வகை வகையான உணவு வகைகளை 6 வயது சிறுவன் ஆர்டர் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிறிஸ்டின் தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றதால் 6 வயது மகனான மேசனை தந்தை கவனித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அப்போது மகன் கேம் விளையாட கேட்டதால் தன்னுடைய ஃபோனை கொடுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கெய்த்தின் […]
குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் இதுதான் நடக்கும்போல..!! ரூ.80 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்..!!

You May Like