
சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வருகின்ற ஜூன் 17 முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளஅறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. அதோடு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது