14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன் (34) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வாலிபர் மதுபாலன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, மாணவி கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டதால், அவரது பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், பெற்றோரின் தலையில் குண்டை தூக்கிப் போட்டார்.
அதாவது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, வாலிபருடன் உல்லாசமாக இருந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், சிறுமியுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய வாலிபர் மதுபாலனை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.