தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததால், ஒரு கிராம் தங்கம் ரூ.5000-ஐ நெருங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மேலும் பல்வேறு தொழில்களும் முடங்கி உள்ளதால், தொழில்துறையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் காரணத்தால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ. 43 உயர்ந்ததால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,764-ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.344 உயர்ந்து, 37,792-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ஒன்றிற்கு ரூ.53 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1200 அதிகரித்து 54,300-ஆக அதிகரித்துள்ளது.