பிஎஃப் பயனர்களுக்கு நற்செய்தி.. வட்டித்தொகை குறித்து விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

நாட்டில் உள்ள 6.5 கோடி ஊழியர்கள் மற்றும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பிஎஃப் தொகைக்கான வட்டிப் பணம் ஹோலிக்கு முன், அதாவது மார்ச் முதல் வாரத்தில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இம்மாதம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. அதன்படி, 8.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம், ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிஎஃப் விதிகளில் மாற்றங்களை அறிவித்தார்.. அத்தகைய சூழ்நிலையில், 2022-23 நிதியாண்டிற்கான ஊழியரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு விரைவில் வட்டி கிடைக்கும். மார்ச் 2022 இல், அரசாங்கம் PF கணக்கில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது.

இதனிடையே இஎஃப்.ஓ அமைப்பு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “ பிஎஃப் வட்டி செலுத்தும் செயல்முறை நடந்து வருகிறது, முழுப் பணம் செலுத்தியதற்கும் உங்களுக்கு வட்டி கிடைக்கும் மற்றும் எந்தக் கணக்கு வைத்திருப்பவருக்கும் நஷ்டம் ஏற்படாது. வட்டி விஷயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.,” என்று தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.72,000 கோடி மொத்தமாக ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.. பண்டிகைகளுக்கு முன் வட்டி விகிதத்தை அரசு அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும், பிஎஃப் பயனர்கள், இணைய மோசடிகள், போலி தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.. யாருடனும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதன் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என்று EPFO கூறியுள்ளது. எனவே நீங்கள் யாருடனும் யுஏஎன் எண், பாஸ்வேர்ட், பான் எண்ணை பகிரக்கூடாது.

Maha

Next Post

விசித்திர சட்டம்.. மனைவியின் பிறந்தநாளை மறந்தால், 5 ஆண்டு சிறைத்தண்டனை.. எந்த நாட்டில் தெரியுமா..?

Mon Feb 13 , 2023
இந்த உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.. அந்த வகையில் இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது குற்றமாகும்.. அதற்காக முறையான சட்டமும் அங்கு இயற்றப்பட்டுள்ளது.. அதன்படி மனைவியின் பிறந்தநாளை மறக்கும் காணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.. சமோவா என்ற தீவு நாட்டில் இந்த விசித்திர சட்டம் பின்பற்றப்படுகிறது.. உலகின் அழகான தீவுகளில் சமோவாவும் ஒன்று.. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் காரணமாக, அந்த […]

You May Like