குட்நியூஸ்.. அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.8,000 வரை உயரப்போகிறது.. விரைவில் முக்கிய அறிவிப்பு..

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும்.. தற்போது, 38% வீதத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 4% உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கிடைக்கும்.

ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.18,000 எனில், புதிய அகவிலைப்படி மாதத்திற்கு (42%) ரூ. 7560 ஆக இருக்கும்.. ஆண்டுக்கு (7560×12) ரூ 90,720 கிடைக்கும்.. இதுவரை மாதத்திற்கான அகவிலைப்படி (38%) ரூ.6840 ஆக உள்ளது.. எனவே தற்போது, 7560- 6840 = மாதம் ரூ 720 அதிகரிக்கும்.. இதன் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8,640 ஆக இருக்கும்.. வெவ்வேறு அடிப்படை ஊதியத்துடன் மேற்கண்ட முறையில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை கணக்கிடலாம்..

Maha

Next Post

ரூ.45 லட்சம் வரை நிதியுதவி..!! இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை..!! மத்திய இணையமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

Wed Feb 15 , 2023
மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்தார். அதில், பணியின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், காணாமல்போன வீரர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாரிசுகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. பள்ளி செல்வதற்கான பேருந்து கட்டணம், ரயில் கட்டணம், பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க […]

You May Like