கோடையில், முடி பிரச்சினை மிகவும் பொதுவானது.
இதற்கு தீர்வாக, நீங்கள் ஓட்ஸ் பாலுடன் ஒரு ஹேர் பேக் செய்யலாம். உங்கள் அன்றாட பராமரிப்பு வழக்கங்களில் இதையும் ஒன்றாக சேர்த்து கொள்ளலாம்.

உங்கள் தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற வாரத்திற்கு 2 முறை இந்த ஓட்ஸ் பால் ஹேர் பேக்கைப் பயன்படுத்துங்கள். ஓட்ஸ் உடலுக்கு மட்டும் அல்ல முடிக்கும் நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை உணர, நீங்கள் ஒரு முறை முயற்சி செய்யது பாருங்கள். இதில் அதிக அளவு புரதம் உள்ளது. இது முடியை வலுப்படுத்தி தடிமனாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.
கோடை நாட்கள் என்பதாலும், ஒழுங்கற்ற மழையின் காரணமாக வானிலையில் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், தலைவலி மற்றும் பொடுகு ஆகியவற்றால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு, நீங்கள் ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். ஓட்ஸ் மில்க் ஹேர் மாஸ்க் உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெயை நீக்கி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்கின் நன்மைகள் மற்றும் அதை உருவாக்கும் முறை ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.

ஹேர் கலரிங் செய்தவரா நீங்கள்?
உங்கள் தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்திருந்தால், ஓட்ஸ் பால் மாஸ்க் உங்களுக்கு நன்மை பயக்கும் ஷாம்பாக இருக்கும்.
இதைப் பயன்படுத்துவதால் முடி நிறம் நீக்காது, முடியை உலர வைக்காது.

முடி பளபளப்பாக இருக்க வேண்டுமா?
இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதால் முடி பளபளப்பாகிறது, இது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
கூடுதலாக, இது கூந்தலுக்கு அடர்த்தியை கொடுக்கிறது மற்றும் அவற்றை ஈரப்பதமாக்குகிறது.

பொடுகு நீக்க:
இது அரிப்புகளை போக்க அறியப்படுகிறது. இது உச்சந்தலையில் ஈரப்பதமாக்குகிறது மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. இது உச்சந்தலையில் உறைந்த இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாக மாற்றும்.

முடி உதிர்தல் தடுப்பு:
ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்க் முடியை வலுப்படுத்த சிறந்தது. முழு கிரீம் பால் மற்றும் பாதாம் பாலுடன் பயன்படுத்தினால், உச்சந்தலையில் நீரேற்றம் கிடைக்கும்.

தேவையான பொருள்
கள்: ஓட்ஸ் – 1 கப்
சுடு நீர் – 2 கப்
மஸ்லின் துணி
ஓட்ஸ் மற்றும் சூடான நீரை ஒரு கப்பில் போட்டு கலக்கவும்.
ஒரு மஸ்லின் துணியை எடுத்து ஓட்ஸை வடிகட்டவும். இது இப்பொது ஷாம்பு போல் மாறிவிடும். ஷாம்பு செய்த பிறகு, இந்த ஓட்ஸ் மாஸ்க்கை முடிக்கு தடவவும். 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் முடியை வெற்று நீரில் கழுவ வேண்டும்.
