குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப் – 2 ஏ நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதத் தகுதியான தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவு எண் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக ( https://rb.gy/k4xd6w ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிலை தேர்வை நடத்தியது. தேர்வில் 57, 641 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு தான் 25-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 5, 413 இடங்களுக்கான முதன்மை தேர்வு நடக்க உள்ளது. இந்த முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்குத் தனியாகத் தரவரிசை பட்டியலும் நேர்முகத்தேர்வு அல்லாத பகுதிகளுக்குத் தனியாகத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.