கே.எல்.ராகுல் கேர்ள் ஃப்ரண்டை பார்த்திருக்கீங்களா?

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கே.எல்.ராகுல் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான கே.எல். ராகுல் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடிகையான ஆதித்யா ஷெட்டியை காதலித்து வருகின்றார். இன்று அவருக்கு 30 ஆவது பிறந்த நாள் .இந்த பிறந்த நாளுக்கு அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை பகிர்ந்து தன் காதலை வெளிப்படுத்தியதோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கே.எல். ராகுல் ஆதித்யா ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ’’ எனது ஜோக்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், அனைத்தையும் இனி சிறப்பாக செய்ய வேண்டும்’’ என வாழ்த்தியுள்ளார்.

https://www.instagram.com/p/CkkrIkBrZZc/?utm_source=ig_web_copy_link

கே.எல்.ராஹுல் வாழ்த்தியுள்ள நிலையில் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதமாக ஆதித்யாஷெட்டி, ’’லவ் யூ’’ என எழுதியுள்ளார். இவருக்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் ’’பாபி ஜி’’ (அண்ணி) என குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு இன்று வைரலாகி வருகின்றது.

ஆதித்யா ஷெட்டி யார் தெரியுமா? : கோலாகலமாக இன்று பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் ஆதித்யா ஷெட்டி இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார்.

https://www.instagram.com/p/CkjR5_ZBQvE/?utm_source=ig_web_copy_link

அவரும் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் அழகான, ஈர்க்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ’’ என் வாழ்க்கையே பிறந்த நாள் வாழ்த்துக்கள், ’’ என கூறியுள்ளார். தந்தை-மகள் இடையேயான இந்த பதிவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

Next Post

கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.10000 ஓய்வூதியம்… அசோக் சிகாமணி அறிவிப்பு

Sat Nov 5 , 2022
ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ள அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அசோக் சிகாமணி கூறுகையில், ’’ ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்கள் பயன் பெறும் வகையில் மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ராஞ்சி கோப்பை போட்டிகளை நடத்த […]

You May Like