’அவரு என்னை கெடுத்துட்டாரு’..!! காதலனை போலீசில் சிக்க வைக்க பலே பிளான் போட்ட இளம்பெண்..!!

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

செங்கல்பட்டு காவல்நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த போது, தன்னை நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் மிரட்டி கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அவை அனைத்தும் முன்னுக்குபின் முரணான தகவலாக உள்ளது என்றும், நடத்திய விசாரணையில் அந்த பெண் காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும், கூட்டு பாலியல் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும் காதலனை சிக்க வைக்க அந்த பெண் இதுபோன்று நாடகமாடி உள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சூதாட்ட செயலிகள், கடன் செயலிகளுக்கு தடை..!! மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Sun Feb 5 , 2023
138 சூதாட்ட செயலிகள், 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகள் மூலமும் மக்கள் கடன்களை வாங்கி, பிறகு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை […]

You May Like