கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
செங்கல்பட்டு காவல்நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த போது, தன்னை நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் மிரட்டி கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அவை அனைத்தும் முன்னுக்குபின் முரணான தகவலாக உள்ளது என்றும், நடத்திய விசாரணையில் அந்த பெண் காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும், கூட்டு பாலியல் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும் காதலனை சிக்க வைக்க அந்த பெண் இதுபோன்று நாடகமாடி உள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.