சென்னையை அலறவிடும் கனமழை..!! புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!! ’மக்களே நோட் பண்ணிக்கோங்க’..!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையை அலறவிடும் கனமழை..!! புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!! ’மக்களே நோட் பண்ணிக்கோங்க’..!

இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அலறவிடும் கனமழை..!! புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!! ’மக்களே நோட் பண்ணிக்கோங்க’..!

மேலும், 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’நம்ம சென்னை’ செயலி அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாகவும் உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கணவன் இல்லாத நேரத்தில் முன்னாள் காதலனை வீட்டுக்கு அழைத்த பெண்… இரவில் நடந்த அதிர்ச்சி!!

Tue Nov 1 , 2022
திருமணத்திற்கு பிறகும் காதல் தொடர்ந்ததால் காதலனை வீட்டுக்குஅழைத்த நிலையில் காதலனே கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இளம் ஜோடி கார்த்தி-பிருந்தா. கர்ப்பிணியான பிருந்தா கடந்த 28-ம் தேதி வீட்டில் பிணமாக இருந்தார். அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பார்த்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சியானது. இது பற்றி காவல்நிலையத்திற்குகார்த்தி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

You May Like