கோவையில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியது.
மேலும் முபின் வீட்டில் சோதனையிட்ட போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து இருந்தார். வழக்கு தொடர்பாக ஐந்து பேரை கோவில் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார்வன் இணைந்து அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.