ஜப்பானின் முக்கிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குளிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமாக இருக்கும். அந்நாட்டினரும் இதனை பெரிதும் விரும்புவர். அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நீருற்றிற்கு சென்று ஜாலியாக இருந்து வருவர். இந்நிலையில், அந்த ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசிய வீடியோ எடுத்து ஒரு கும்பல் பணம் சம்பாதித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, குளிக்கும் பெண்களை ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் சிலர் எடுப்பதாக ஷிசுவோகா மாகாண போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், 17 பேர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜப்பானின் ‘அசாஹி ஷிம்பன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட வெந்நீர் நீருற்றுகளில் குளித்த பெண்களில் 10,000 பேரின் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை எடுத்து சிலர் விற்பனை செய்துள்ளனர். இதில், டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கரின் சைட்டோ (50) என்பவர் தனது 20 வயதிலிருந்தே வெந்நீர் ஊற்றுகளுக்கு வரும் பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற ஆண்கள், கரின் சைட்டோவிடமிருந்து பெண்களைப் படம்பிடிக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டது தெரியவந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.