அருவா எப்படி பிடிக்கணும் தெரியுமா…..? கணவனின் அரிவாளை எடுத்து அவரையே வதம் செய்த மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு….!

தன்னை வெட்ட வந்த கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே போட்டு தள்ளிய மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கின்ற வட பருத்தியூரை சேர்ந்தவர் நாட்டுதுரை. இவர் விவசாயம் பார்த்து வந்தார். இவருடைய மனைவி கருப்பாத்தாள். இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான், நள்ளிரவில் நாட்டுதுரை மனைவியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அவருடைய மனைவி கருப்பாத்தாள் தற்காப்புக்காக கணவரிடம் இருந்த அரிவாளை பிடுங்க முயற்சி செய்தபோது, கணவர் மீண்டும், மீண்டும் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கருப்பாத்தாள், கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே சரமாரியாக வெட்டியதில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் தான், அருகில் இருந்தவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த நாட்டுதுரையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கொலை செய்த மனைவி கருப்பாத்தாளை, கீரனூர் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

Vijayakanth | விஜயகாந்தை நேரில் பார்க்க வேண்டுமா..? கட்சி அலுவலகத்தில் நாளை சந்திக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Thu Aug 24 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்தால் முன்பு போல சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். ஏராளமான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், இருக்கையில் அமர்ந்த படியே இருக்கிறார். இந்நிலையில், விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 02005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் எனது […]

You May Like