“தீராத சந்தேகம்..” உளியால் அடித்து கொடூர கொலை.! இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடுமை.!

டெல்லியில் 40 வயது மனைவியை, கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகித்து, அவரது கணவர் உளியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுச் சென்று தப்பியோடிவிட்டார். காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்ட அந்த கணவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி புராரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி அளவில், காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் சத்ய விஹாரில், பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் வழக்கு பதிவு செய்து, புராரி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், இறந்த பெண்ணின் கணவர் குந்தன் ஷா (46), மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் இந்த கொலையைச் செய்ததாக தெரியவந்துள்ளது. தன் மனைவி நீண்ட காலமாக தன்னை புறக்கணித்ததால், வேறு யாருடனோ பழகுவதாக நம்பிய அவர், உளியைக் கொண்டு தாக்கி கொலை செய்துள்ளார். கணவன் மனைவிக்குள் இதனால் அடிக்கடி தகராறு வந்ததாகவும், இதுகுறித்து டெல்லியில் முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் முன்பே வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்ய பயன்படுத்திய உளி மற்றும் இறந்தவரின் கைப்பேசியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை சம்பவத்தினால், அவர்களின் இரு குழந்தைகளும் பாதித்திருப்பதை கண்ட சுற்றத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Next Post

"டான்ஸ் மாஸ்டருடன் தாய் தகாத உறவு"! கண்டித்த சிறுமிக்கு கொலை மிரட்டல்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

Sun Feb 4 , 2024
தனது தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நடன பயிற்சியாளர். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் நடன இயக்குனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் உள்ள கேகே நகரில், 17 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த சிறுமியின் […]

You May Like