ஓவல் மைதானம் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் – விராட் கோலி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி WTC ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல்முறை தோல்வியடைந்ததை போன்று தற்போதும் நடந்துவிடக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விராட் கோலி.


கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 3 வருட பெரிய இடைவெளிக்கு பிறகு தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. தற்போது ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்திலும் ரன்களை குவித்துவரும் விராட் கோலி, ஒரு இன்-ஃபார்ம் பேட்ஸ்மேனாக WTC இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில் இறுதிப்போட்டி குறித்து பேசியிருக்கும் விராட் கோலி, “ஓவல் மைதானம் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஒருபோதும் ஃபிளாட் விக்கெட் கிடைக்கப்போவதில்லை, அதனால் பேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் பேட்டிங் மற்றும் அதன் ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான நேர்காணலில் பேசியிருக்கும் விராட் கோலி, “மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடும் அனுபவத்தை வீரர்கள் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து ஓவல் ஆடுகளம் எப்போதும் போலவே செயல்படும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் செல்லக்கூடாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
இரண்டு அணிகளுக்கும் சாதகம் இல்லாத வகையில், நடுநிலையான மைதானத்தில் விளையாடுவது சிறப்பானது என்று நினைக்கிறேன். இதுதான் டெஸ்ட் போட்டியின் அழகும் கூட. அதுவே இங்கு நடந்துள்ளது.

இங்கு இப்போது ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே கோப்பையை வெல்வார்கள். இரு அணிகளும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டு விளையாட தயாராவதை பார்க்கிறபோது, மிகவும் உற்சாகமாக உள்ளது” என்று கோலி மேலும் கூறியுள்ளார்.

RUPA

Next Post

தன் மகனுக்கு அதிகாரத்தை அளிக்க உத்தரவிடவும் சாப்பிடுவதற்கும் மட்டும்தான் வாய் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்...

Wed Jun 7 , 2023
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆலம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கருணாநிதி மகன் என்ற பின்புலத்துடன்தான் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால், எடப்பாடியார் அப்படி அல்ல, 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கழகப் பொதுச்செயலாளராகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தமிழகத்துக்கு […]
rb udhayakumar

You May Like