கணவன், மனைவியிடம் சிக்கித் தவித்த ஐஐடி மாணவன்..!! கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம்..!! கொடூர சம்பவம்..!!

மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு, தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் செயலி ஒன்றின் மூலமாக 40 வயதான ஆண் ஒருவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஐஐடி மாணவர், 40 வயதான அந்த ஆண் மீது மும்பை போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அந்நபர் தன்னுடன் இயற்கைக்கு மாறான வகையில் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், தாந்திரீக முறையில் உடலுறவு கொள்கிறேன் என்ற பெயரில் உயிரே போகுமளவுக்கு கழுத்தை நெறித்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், அந்நபர் தன்னை கை, கால்களை கட்டிப்போட்டு வல்லுறவு செய்ததாகவும், உடல் ரீதியாக காயப்படுத்தியாகவும் அந்த புகாரில் மாணவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மனைவி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் கணவன் – மனைவி இருவரிடம் பாலியலில் ரீதியாக கொடுமைகளை அனுபவித்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போவாய் காவல்நிலைய மூத்த ஆய்வாளர் புதன் சாவந்த் சாவந்த் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட கணவர், மனைவி இருவரும் உயர் படிப்பு முடித்தவர்கள் மற்றும் நல்ல வேலையில் உள்ளவர்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர். ஆப் மூலம் முன்பின் தெரியாதவர்களிடம் சிக்கி பாலியல் ரீதியாக சொல்ல முடியாத கொடுமைகளுக்கு இளைஞர் ஒருவர் ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”நீ என்ன லவ் பண்ண மாட்டியா”..!! காதலிக்க மறுத்த பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம்..!! குடும்பமே உடந்தை..!!

Sun Feb 19 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி. இந்த இளைஞர் சத்யப்பிரியா என்ற இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சேதுபதியின் ஒருதலைக்காதல் தொல்லை குறித்து சத்தியப்பிரியா யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சேதுபதியின் தொல்லை அதிகரிக்கவே வேறு வழியின்றி யாரிடமாவது சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்குள் சத்யப்பிரியாவை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் சேதுபதி. சேதுபதியின் இந்த […]

You May Like