கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம் கொலை செய்யப்பட்ட குழந்தைகள்…..! இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் இருந்து வெளியேற முயற்சித்தாலும் ஒரு சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள்.

அப்படி ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் அருகே சோழவரம் அடுத்துள்ள ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற விகாரைச் சார்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துவர்க்காபர் என்ற நபரும் வேலை பார்த்து வந்தார். துவர்க்காபாருக்கு சுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில் தான் சுமிதாவுக்கும்,குட்டுலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலராக மாறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு பணி முடிவடைந்து வீட்டிற்கு வந்த துவர்காப்பர் தன்னுடைய மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பாக்கத்தில் விசாரித்திருக்கிறார்.

அப்போது அவர்கள் புற்றுநோய் வீட்டிற்கு சென்றதாக தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், மனைவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமிதாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த குழந்தைகள் சிவா(4), ரீமா(1) உள்ளிட்ட 2️ சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குட்டுலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்

Next Post

தலைக்கேறிய ஆத்திரம் தீயில் கருகிய 5 பேர்….! அடியோடு அழிந்த குடும்பம்….!

Thu Feb 9 , 2023
கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ், தமிழரசி தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்குரு என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தனலட்சுமியின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அத்துடன் வேறொரு பெண்ணுடன் அவருக்கு […]
சொந்த ஊருக்கு திரும்பிய உடனே..!! நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! பதறியடித்து ஓடிய உறவினர்கள்..!! அதிர்ச்சி

You May Like