’எனக்கும் பசிக்கும்ல’..!! ’கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை ருசித்து சாப்பிட்ட டெலிவரி பாய்’..!! அந்த மெசேஜ்தான் ஹைலைட்..!!

பிடித்தமான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அது டெலிவரியாகும் வரை கண்கொத்தி பாம்பு போல காத்திருக்கும் நிகழ்வு பலருக்கும் நடந்திருக்கும். ஆனால், அவ்வளவு நேரம் காத்திருந்தும் நீங்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு கிட்டவில்லை என்றால் எப்படி இருக்கும்..? அப்படியான சம்பவத்தைதான் பிரிட்டனை சேர்ந்த ட்விட்டர் பயனர் அனுபவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வராமல் போனதோடு, அது குறித்து டெலிவரி பாய் மெசேஜ் செய்ததுதான் அவரை இன்னும் கடுப்படையச் செய்திருக்கிறது என்பது அவர் பகிர்ந்த ட்வீட் மூலம் அறியலாம்.

’எனக்கும் பசிக்கும்ல’..!! ’கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை ருசித்து சாப்பிட்ட டெலிவரி பாய்’..!! அந்த மெசேஜ்தான் ஹைலைட்..!!

அதன்படி, Bags என்ற ட்விட்டர் பக்கத்தில், அவருக்கும் இங்கிலாந்தின் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான deliveroo ஊழியருக்கும் இடையே நடந்த மெசேஜ் உரையாடலை பகிர்ந்திருக்கிறார். அதில், sorry என டெலிவரி பாய் மெசேஜ் அனுப்ப, அதற்கு ஏன் என்ன ஆச்சு என வாடிக்கையாளர் கேட்க, “நீங்கள் ஆர்டர் செய்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. அதை நான் சாப்பிடுகிறேன். deliveroo நிறுவனத்திடம் புகாரளித்துக் கொள்ளுங்கள்” என டெலிவரி பாய் கூறியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துப்போன அந்த பயனர், “பயங்கரமான ஆளாக இருக்கிறாய்” என பதிலளிக்க அதற்கு அந்த டெலிவரி பாய் “அதைப் பற்றி எனக்கு கவலையில்லை” என கூறியிருக்கிறார்.

இந்த கான்வர்சேஷனை ட்விட்டரில் பகிர்ந்த அவர், “deliveroo ஊழியர் இப்படி முரட்டுத்தனமாக இருந்திருக்கிறார்” எனக் கேப்ஷனிட அந்த ட்வீட் பல்லாயிரக் கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், பலரும் deliveroo நிறுவன ஊழியர்களாலும் அந்த நிறுவனத்தாலும் தங்களுக்கு நேர்ந்த அபத்தமான சூழ்நிலைகள் குறித்தும் பதிவிட்டுள்ளனர். அதில், மார்வின் என்ற பயனர் ஒருவர், “deliveroo-விடம் இருந்து எதாவது பதில் கிடைக்கும் என தயவுசெய்து எதிர்ப்பார்க்கவே வேண்டாம். நான் அந்த அப்ளிகேஷனையே நீக்கிவிட்டேன்” என பதிவிட்டிருக்கிறார்.

Chella

Next Post

ஓய்வூதியம் பெறும் நபர்கள் கவலை வேண்டாம்...! 2 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்....!

Tue Nov 1 , 2022
ஓய்வூதியம் பெருநவர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் […]

You May Like