தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு பேசியதால் கல்லூரி மாணவியும், அவருடைய உறவினரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத் (44). இவரது வீட்டின் அருகே மதுரா (24) என்ற பி.எட். படிக்கும் மாணவி வசித்து வந்துள்ளார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக அஸ்வத்தின் மனைவி லட்சுமியும், அவரது சகோதரரான சிக்கண்ணய்யாவும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, அஸ்வத்துடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுராவை சிக்கண்ணய்யா எச்சரித்துள்ளார்.
இதனால், மனம் உடைந்த மதுரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரா தற்கொலை செய்துகொண்டது பற்றி அறிந்ததும் அஸ்வத்தும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து இருவரிடன் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.