ஓயாத செல்போன் பேச்சு..!! தூக்கி அடித்த கணவன்..!! தூக்கில் தொங்கிய மனைவி..!!

கணவர், தன்னுடைய செல்போனைப் பிடுங்கி உடைத்து விட்டதால், மனமுடைந்த மனைவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள அழகியநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங் (27). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சினேகாவை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், மனைவி சினேகா அடிக்கடி செல்போனில் பலரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும், அதனை கணவர் பலமுறை கண்டித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சினேகா சென்றுவிடுவாராம். இந்நிலையில், சம்பவத்தன்று சினேகாவையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு மைக்கில் மதன் சிங் தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஓயாத செல்போன் பேச்சு..!! தூக்கி அடித்த கணவன்..!! தூக்கில் தொங்கிய மனைவி..!!

அப்போது சினேகா நீண்ட நேரமாக செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த ஆவேசமடைந்த கணவன் மைக்கேல், ‘நீ எவ்வளவு சொல்லியும் திருந்தல’ என நினைத்துக் கொண்டு சினேகாவிடம் இருந்து செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சினேகா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக் கொண்டு உள்ளே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து, சினேகாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் சினேகாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து மைக்கேல் மதன் சிங் சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், இன்று அடித்தேக் கொன்றுவிட்டார் எனவும் குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்தனர்.

ஓயாத செல்போன் பேச்சு..!! தூக்கி அடித்த கணவன்..!! தூக்கில் தொங்கிய மனைவி..!!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து, மைக்கேல் மதனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சினேகாவின் உறவினர்களிடமும், தாய் தந்தையரிடம் விசாரணை மேற்கொண்டனர். இறந்த சினேகாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினேகா செல்போன் உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்தாரா? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்..!! அவமானத்திற்கு பயந்து மகளை வீட்டை விட்டு துரத்திய பெற்றோர்..!!

Fri Oct 28 , 2022
அவமானத்திற்கு பயந்து 4 கொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மகளை, வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹிரன் மங்க்ரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது மாற்றுத் திறனாளி பெண் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த பெண்ணின் நிலை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பெண்கள் […]
2-வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like