
டெல்லி: இந்தியா – சீனா ராணுவத்தினருக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையினையடுத்து இருநாட்டு படைகளையும் விளக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் தொடர் பதற்றம் நீடித்து வந்தது. எனவே இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக்கை அடுத்த மோல்டோ என்ற இடத்தில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை சுமார் 12 மணி நேரமாக நடைபெற்றது. எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், தற்போது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து, இரு நாட்டுத் துருப்புகளையும் விளக்கிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் 28 முதல் 30 கம்பெனிகள் வரையிலான இந்தோ – திபெத் போலீஸ் படையை பணிக்கு காவல் பணிக்கு அமர்த்துவது என்றும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.